9600503750

சுயமரியாதைத் திருமணம் ஏன்?

சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவுக்கு ஒவ்வாத மதம் சார்ந்த மூடச் சடங்குகளைத் தவிர்த்து, புரோகிதத்தை மறுத்து, அறிவியல் பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, சிக்கனமாக செய்யப்படும் திருமணம் ஆகும். 'வாழ்க்கையில் பிரவேசிக்க வயது வந்த ஓர் ஆணும், பெண்ணும் செய்துகொள்ளும் ஒப்பந்தம்' என்று எளிமையாக இதற்கு விளக்கம் சொன்னார் தந்தை பெரியார்.

மதம் சார்ந்த, குறிப்பாக இந்துமதத் திருமண முறைகள் பெண்களை அடிமையாக்கும் சடங்குகளையும், புரியாத வடமொழியில் இழிவுபடுத்தும் மந்திரங்களையும் கொண்டதாகவும், தேவையற்ற பொருளாதார வீணடிப்பைச் செய்வதாகவும் உள்ளன. எனவே சிக்கனமாக எளிமையாக நம் தாய்மொழியில் உறுதிமொழி கூறி செய்துகொள்ளும் முறையே இந்தத் திருமணம்.